Saturday, November 19, 2011

புனித புர்தா நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு துபாய் சபையில் புனிதபுர்தா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி ஜாமிஆ மஸ்ஜிதில் 27 ஆண்டுகளாக பணிப்புரிந்த சித்த மருத்துவர் முதுவை டாக்டர் மௌலவி ஷேக்முஹம்மது ஆலிம் மன்பஈ அவர்கள் வருகைப்புரிந்து பயான் செய்தார்கள்.
இவர்களைத் தொடர்ந்து பொருளாதார நிபுணர் மோத்திலால் ஓசூவல் செக்யூரிட்டி நிறுவனத்தின் சப்புரோக்கர் திருவாரூர் பிரோஸா அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இந்திய பங்குசந்தை மற்றும் ஷரீஅத் பங்குகளைப் பற்றிய விளக்கமான சொற்பொழிவை நிகழ்த்தினார்.

முதுவை டாக்டர் மௌலவி ஷேக்முஹம்மது ஆலிம் மன்பஈ அவர்களுக்கு பொன்னாடையை மௌலானாமார்களும் கலீபா சகாபுதீன் அவர்களும் அணிவிக்கிறார்கள்.

பொருளாதார நிபுணர் திருவாரூர் பிரோஸா அவர்களுக்கு மௌலானாமார்கள் மற்றும் கலீபா சகாபுதீன் அவர்களும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்துகிறார்கள்.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்