Sunday, December 5, 2010

டிசம்பர் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை 3.12.2010 அன்று இஷா தொழுகைக்கு பின் 8.00 மணிக்கு டிசம்பர் மாதக்கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னிலை பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா அவர்களும் தலைமை திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்களும் வகித்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் அதிரை அப்துல்ரஹ்மான் கிராஅத் ஓதினார்
அதைத் தொடர்ந்து நபிப ;புகழ் பாடலை மதுக்கூர் சாகுல்ஹமீதும்
ஞானப்பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூதும் பாடினார்கள்.

பேச்சாளர்கள்

அமீர்அலி,
இதயத்துல்லாஹ்,
அப்துல்மாலிக்,
ராஜாமுஹம்மது,
ஆசிக் அப்துல்ரஹ்மான்

சிறப்பான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.

கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் அவர்கள் அமீரகத்திலிருந்து தாயகத்தில் நிரந்தரமாக தொழில் செய்யும் முகமாக செல்ல இருப்பதால் அவர்களுக்கு வழியனுப்பும் விழாவாக அவர்களை கௌரப்படுத்தி உரையாற்றி பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார் பொதுச் செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப்.

இறுதியாக தௌபா பைத்துடன் இக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.