Sunday, October 27, 2013

சங்கைமிகு ஷெய்கு நாயகம் மயிலாடுதுறை விஜயம் 2013

சங்கைமிகு ஷெய்கு நாயகம் அக்டோபர் 23-ம் தேதி திருச்சியிலிருந்து தஞ்சை வாவா முகம்மது அவர்களின் இல்லம் வந்து துவா செய்துவிட்டு மதியத்திற்கு பின் அபுசாலி அவர்களின் இல்லம் சென்று துவா செய்துவிட்டு அங்கிருந்து

மாலை மயிலாடுதுறை கிளியனூர் இஸ்மத் புதிய இல்லத்திற்கு வருகைப் புரிந்து அன்றைய தினமும் மறுநாள் காலை 11.00 மணிவரையிலும் தங்கிருந்து அவர்களைக் காணவந்த முரிதீன்கள், ஆஷிக்கீன்கள் அனைவருக்கும் துவா செய்தார்கள்.

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் பைஜி சங்கைமிகு ஷெய்கு நாயகம் முன்னிலையில் பாடல்கள் பாடி மனம் மகிழ்ந்தார்.
மன்னார்குடி ஷேக்தாவூது மற்றும் வைத்தியர் அப்துல்மாலிக் தங்கள் குடும்பத்தினர்களுடன் வருகைத்தந்து தரிசித்தனர்.

மயிலாடுதுறை சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் சங்கைமிகு ஷெய்கு நாயகத்தை தரிச்சிப்பதற்கு பலரும் வருகைப்புரிந்திருந்தார்கள்.