Monday, March 1, 2010

மீலாதுன்னபி விழாவில் அரபு-தமிழ் அகராதி வெளியீடு

இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன்னபி பெருவிழாவில் சிறப்பம்சமாக குத்புல்பரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்களால் தூயத் தமிழில் எழுதப்பட்ட அரபு-தமிழ் அகராதி வெளியிடப்பட்டது. சுமார்45 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இவ்வகராதி அவர்கள் மகனார் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல்
ஹு
ஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்களின் அயராத முயற்சியின் பேரில் பல நவீன கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டு கண்மணிநாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில் வெளியீடப்படுவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.

இவ்வகராதியை சிறப்புமிகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய செயலாளரும் அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைய்தீன் அவர்களால் வெளியீடப்பட்டது.

இரண்டாம் பிரதியை சங்கைமிகு இமாம் கலீல் அவுன் மௌலானா அவர்கள் இலங்கை மகாண கவர்னர் அஸ்ஸையது அலவி மௌலானா அவர்களின் அன்பு புதல்வருக்கு வழங்கினார்கள்.

மாலை சங்கைமிகு இமாம் கலீல் அவுன் மௌலானா அவர்களின் அருள்மொழிக்கோர்வையான மனிதா என்ற நூலும் ஆத்மீக சகோதரர் மதுக்கூர் கலீபா அட்வகேட் லியாகத்அலி அவர்கள் மறைஞானப்பேழை மாதப்பத்திரிக்கையில் இருபது ஆண்டுகளாக கேள்வி பதில் பகுதியில் பதிலளித்து வந்த மெய்யொளி பதில்கள் நூலாக வெளியீடப்பட்டது.