Saturday, April 21, 2012

நான் கண்ட ஞானி

குருவாய் அமைந்த ஞானி
*******கரையைக் கடக்கும் தோணி
 திருவாய் மலர்ந்து அருள்வீர்
 ********தீஞ்சுவை பாடம் தருவீர்

சத்தியம் நிலைக்க வந்தீர்
******சமத்துவ மார்க்கம் தந்தீர்
புத்தியும் தெளிவாய்ப் பெற்றோம்
******பேதமை களையக் கற்றோம்

நித்தமும் உங்கள் பேச்சு
*****நினைவெலாம் ஆகிப் போச்சு
 சுத்தமும் கற்றுக் கொண்டோம்
******சுகமெலாம் பெற்றுக் கொண்டோம்

திக்கினை யறியாக் காட்டில்
******திசையினை எமக்குக் காட்டி
ஹக்கினை தீனாய்ச் சொன்னீர்
******அஃதும் தேனாய்ச் சொன்னீர்

-“கவியன்பன்” கலாம் , அதிராம்பட்டினம்(பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)