Saturday, December 10, 2011

இராத்தீபத்துல் காதிரிய்யா மற்றும் சிறப்பு மாதாந்திரக் கூட்டமும்

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை துபாயில் 09/12/2011 இன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் இராத்திபத்துல் காதிரிய்யா மற்றும் ஆஷீரா தின சிறப்பு மாதாந்திரக் கூட்டமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக மௌலானா அப்துல்ஹை கிராஅத் ஓதி துவங்கினார்கள்
ஞானப்பாடல் பாடும் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரிஅவர்கள்

ஹுவல்வுஜுது ஏகத்துவப் பாடலை அலாவுதீன் ஹக்கியுல் காதிரி மற்றும் முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி பாடுகிறார்கள்

நபிபுகழ் பாடலை பாடுகிறார் சாகுல்ஹமீது ஹக்கியுல் காதிரி

சிறப்பு மாதாந்திரக் கூட்டத்திற்கு நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A ஹக்கியுல் காதரி தலைமை வகித்து கர்பலாவில் நடந்த அந்த நிகழ்ச்சியை மனம் உருக சுமார் தென்னூறு நிமிடங்களுக்கும் அதிகமாக உரை நிகழ்த்தினார்.
இந்த சொற்பொழிவை கேட்ட அனைவரும் மனதளவில் அந்த சோகத்தில் பங்கெடுத்தனர்.


இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் ஃபஹிமிய்யா டிரஸ்ட் நிறுவனம் வெளியீட்டுள்ள கண்ணியமிக்க மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்களின்  மஸ்னவி ஷரீப் பாகம்-2 சபையில் வெளியிடப்பட்டது.
காயல்பட்டனத்தைச் சார்ந்த சகோதரர் ஜலாலுதீன் மற்றும் முஹம்மது நூஹு அவர்கள் மஸ்னவி ஷரீப் காவியத்தைப் பற்றிய சிறு அறிமுகம் செய்து  வழங்கினார்கள்
முதல் பிரதியை மௌலானாமார்களின் முன்னிலையில் கலீபா சகாபுதீன் பெற்றுக் கொள்கிறார்கள்.

மதுக்கூர் சாகுல்ஹமிது பெற்றுக் கொள்கிறார்
கலீபா முஹம்மது முஸ்தபா பெற்றுக் கொள்கிறார்கள்
துணைத்தலைவர் கீழக்கரை காதர்ஷாகிப் பெற்றுக் கொள்கிறார்கள்
திருமக்கோட்டை தாஜிதீன் பெற்றுக் கொள்கிறார்
பேராவூரணி அன்வர்உசேன் பெற்றுக் கொள்கிறார்

பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா பெற்றுக்கொள்கிறார்கள்
பொருளாளர் மதுக்கூர் முஹம்மது தாவூது பெற்றுக் கொள்கிறார்
நிகழ்ச்சியின் நிறைவாக தௌஃபா பைத்துடன் இனிதே நிறைவடைந்தது இஷா தொழுகை அங்கே நடைபெற்றது. அனைவருக்கும் தப்ரூக்கும் வழங்கப்பட்டது.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்