Wednesday, October 12, 2011

பிறை 14லின் இராத்திபு நிகழ்ச்சி




துபாய் ஏகத்துவ மெள்ஞ்ஞான சபையில் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி 11/10/2011 செவ்வாய் புதன் மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மௌலானாமார்கள் கலீபாக்கள் ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்.

திருமுல்லைவாசலில் நிறைந்திருக்கும் குத்துபுகள் திலகம் சங்கைமிக்க ஜமாலிய்யா அஸ்செய்யிது யாசீன் மௌலானா அவர்களின் விசால் தின நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற இருப்பதால் மூன்று தினங்களுக்கு கஸீதா சபையில் ஓதப்படுகிறது.

நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் சங்கைமிக்க தந்தைநாயகத்தைப் பற்றிய நினைவுகளை ஷெய்கு நாயகம் அவர்கள் பகிர்ந்துக் கொண்ட பதிவுகளை சபையில் அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் இஃஷா தொழுகை அங்கு நடைபெற்றது அதன் பின் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.