Saturday, May 14, 2011

கவிஞர்களை கௌரவித்த சிறப்பு இசை நிகழ்ச்சி

துபாய் நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் மே 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சிறப்புமிகு கவிஞர்களான கலீபா ஆலிம் புலவர் திண்டுக்கல் எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி அவர்களையும் கவிஞர் ஹாபிழ் கொள்ளுமேடு பாரூக் பஜ்லி அவர்களையும் கௌரவிக்கும் முகமாக தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜீத்தீன் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பல அமைப்புகளிலிருந்தும் பலரும் வருகைப்புரிந்து இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற உறுதுணை புரிந்தனர்.

நமது ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையிலிருந்து ஆன்மீகச் சகோதரர்கள் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்புமிகு கவிஞர்களை கௌரவிக்க கண்ணியமிக்க லால்பேட்டை நூருல்லாஹ் பைஜி நூரானிஷா அவர்கள் வருகைப்புரிந்து கவிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிந்தித்துபாரு புதிய இஸ்லாமிய தத்துவப்பாடல்கள் அடங்கிய ஒலி குருந்தகடு வெளியிடப்பட்டது.















கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி அவர்களுக்கு கண்ணியமிக்க நூருல்லாஹ் பைஜி நூரானிஷா அவர்கள் நினைவு பரிசு வழங்குகிறார்கள்


P.P ஜுவல்லரியின் மேலாளர் கீழக்கரை M.E.S.அபுதாஹிர் பைஜிக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்

கீழக்கரை கவிஞர் அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்.








புகைப்படங்கள் - அஹ்மது ஹிம்தாதுல்லாஹ் முதுவை