Wednesday, October 19, 2011

தனிச்சிறப்பு மிக்க பெருமானார் ( ஸல் ) அவர்கள்.

எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தனிச்சிறப்பு " உபூதிய்யத்"
என்னும் அடிமைத்தனத்தை இரண்டு நிலைகளிலும் ஒழித்ததாகும்.

அவற்றில் ஒன்று மக்களில் அடிமையாய் கருதப்பட்டவர்களுக்கு சமுதாயத்தில் சமஉரிமை அளித்து
மனிதரில் யாரும் யாருக்கும் அடிமை இலலை என்பதனை உணர்த்தியதாகும்.

இரண்டாவது, ஆபிதும் (வணங்குபவனும்) மஉபூதும் (வணங்கப்படுபவனும் ) எதார்த்தத்தில் ஒன்றேதான்
வேறானதல்ல அனைத்தையும் ஏகமாகக் காணும்போது அங்கே எஜமான், அடிமை என்னும் பிரிவில்லை.

எனவே "எஜமான்" என ஒருவன் உள்ளான் "அடிமை" என நான் உள்ளேன் எனும் எண்ணத்திலுள்ள அடிமைத்தனத்தையும்
எம்பட்டனார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே அகற்றினார்கள்.

எனவேதான் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே அனைத்திலும் மேலானவர்கள் எனக்கூறுகிறோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது பேரன்பு கொள்ளாதவன் பேரின்பம் காணமாட்டான்.


அருளியவர்கள் : - சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.