Monday, February 24, 2014

துபாய் கலீபா ஏ.பி.எஸ் இல்லத்தில் மீலாதுவிழா

வெள்ளிக்கிழமை 21/02/2014 அன்று காலை 9.30 மணிக்கு கலீபா ஏ.பி.சகாபுதீன் இல்லத்தில் மௌலிது மற்றும் மீலாதுன்னபி (ஸல்) விழா மிக சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சையதுஅலி மௌலானா தலைமையில் நடைபெற்றது. மதுக்கூர் முகம்மது தாவூது நபிப்புகழ் பாட மதுக்கூர் இஸ்மாயில் கவிதை வாசித்தார். அதைத் தொடர்ந்து முகம்மது மஃரூப் சொற்பொழிவும் மௌலவி எஸ்.எம்.உசைன் மக்கீ சிறப்பு சொற்பொழிவும் நிகழ்த்தினர். நிறைவாக நன்றி உரை கலீபா ஏ.பி.எஸ் வழங்கினார். ஜூம்ஆ தொழுகைக்குப் பின் அனைவரும் பிரியாணி வழங்கப்பட்டது.