Wednesday, January 1, 2014

உலகம் தழுவிய ஆன்லைன் மீலாதுன்னபி விழா கேள்வி - பதில் போட்டி 2014

பேரன்புடையீர் !

அஸ்ஸலாமு அலைக்கும்

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தை கௌரவிக்கும் முகமாக  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அமீரகத்தில் ஆண்டுதோறும் ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடாத்தி மீலாதுன் நபி விழாவில் அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்து வந்துள்ளோம்.

இந்த ஆண்டு இந்த  போட்டியை உலகம் தழுவிய போட்டியாக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அறிவித்துள்ளது. இப்போட்டி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், கனடா, துபாய், கத்தார், குவைத், சவூதிஅரேபியா மற்றும் வளைகுடா போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இதில் கலந்து பரிசுகளை வெல்லலாம்.

ஒவ்வொரு நாடுகளிலிருந்து மூன்று வெற்றியாளர்களை தேர்வு செய்கிறோம். மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளோம். 

இந்த போட்டியில் தாங்களும் தங்களின் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள  உதவி செய்யுங்கள்.

உங்களின் பதில்கள் ஜனவரி 31 ம் தேதிக்குள் பதிவு செய்துவிடுங்கள்.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மட்டுமல்லாமல் 63 கேள்விகளை பிரிண்ட் செய்து விநியோகிக்கப்படுகிறது.  உங்களுடைய ஊர்களுக்கு கேள்வி படிவத்தை கீழு;காணும் மௌலவியிடமிருந்து கூரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மௌலவி அப்துஸ்ஸலாம் ஆலிம்
(கிப்லா மாத இதழ் ஆசிரியர்
கைபேசி  - +91 - 9943859758

இந்த போட்டியில் கலந்து வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.

அமீரகம் துபாயில் கலந்துக் கொள்பவர்களுக்கு இன்ஷா அல்லா பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் மாபெரும் மீலாது விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு எங்கள் இமெயில் முகவரியில் தொடர்புக் கொள்ளுங்கள்.
emsmiladnabi@gmail.com


போட்டியில் கலந்துக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
COMPETITION WEBSITE

 இந்த போட்டியில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினரைத் தவிர அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

இந்த போட்டியில் நீங்களும் கலந்து உங்கள் நண்பர்களையும் கலந்துக் கொள்ள செய்யுங்கள்.

இப்போட்டியின் இறுதி தேதி   28/01/2014   க்குள் உங்கள் பதில்களை பதிவுசெய்யுங்கள்.



விழாக் குழுவினர்களின் தீர்ப்பே இறுதியானது.

இப்படிக்கு

மீலாதுவிழா குழுவினர்
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை