Saturday, June 23, 2012

அல்லாஹ்வின் அழகிய வார்த்தைகள்....

அல்லாஹ்வுக்கும், தன் திருநபிக்கும் எதிரானோரை அல்லாஹ் தெளிவாகவே எச்சரிக்கும் திருமறை வசனம் பாரீர்..........

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

"எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே எதிர்கின்றார்களோ,அவர்களே இழிவுக்குள்ளாவார்கள்".

"தாமும், தம்முடைய தூதர்களுமே நிச்சயமாக ஜெயிப்பார்களென்று அல்லாஹ் விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானாகவும் (யாவரையும்) மிகைத்தோனாகவும் இருக்கிறான்".

"(நபியே) எந்த ஜனங்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே)விசுவாசங் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கிறார்களோ (அவர்களை நேசிக்கமாட்டார்கள்) அவர்கள், தங்கள் மூதாதையர்களாயிருந்த போதிலும் அல்லது, தங்களது சந்ததிகளாயிருந்த போதிலும், அல்லது தங்களது சகோதரர்களாயிருந்த போதிலும் அல்லது, தங்களது பந்துக்களாயிருந்தபோதிலும் அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோர்தாம்--இவர்களுடைய இருதயங்களில் அல்லாஹ் விசுவாசத்தைப்பதிய வைத்து தன்னுடைய உணர்வைக் கொண்டு இவர்களைப் பலப்படுத்திவைத்திருக்கிறான். சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்திவிடுவான். அவற்றில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப்பற்றி அல்லாஹ் திருப்தியடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தியடைவார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்.நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் சித்தியடைந்தோர்கள் என்பதை (நபியே நீர்) அறிந்துகொள்ளும்."
                                                                     ---அல்குர்ஆன் 58 : 20,21,22.