Monday, March 5, 2012

மனம் நிறைந்த 41 தினங்கள்

கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த மாதத்தை கௌரவிக்கும்முகமாக துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ரபீஉல் அவ்வல் பிறை ஒன்றிலிருந்து அந்த மாதம் முழுவதும் சுப்ஹான மௌலிதை ஓதி சங்கை செய்தும் அதன் தொடர்ச்சியாக

மஹ்பூபே சுபுஹானி, மஉசூகே ரஹ்மானி, முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் பிறந்த மாதமான ரபீஉல்தானி பிறை ஒன்றிலிருந்து பதினொன்று வரை முஹையுத்தீன் மௌலிதும் ஓதி சங்கை செய்து 45 தினங்கள் முழுமையாக

நிறைந்த மனதுடன், தூய எண்ணத்துடன் மௌலிதுகள் ஓதிய, அத்தனை ஆன்மீக சகோதரர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு தப்ரூக் வழங்கிய சகோதரர்களுக்கும், அதை நிர்வகித்த சகோதரர்களுக்கும், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைத்த சபை அறை சகோதரர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்து கலந்துக் கொண்டவர்களுக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நிர்வாகத்தின் சார்பாக நன்றியினை சமர்ப்பிக்கின்றோம்.
மற்றும் எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருடைய நாட்டத் தேட்டங்களையும்,நிறைவேற்றி நலமான வாழ்வையும் வழங்குவானாக ஆமின்.!
குடந்தை மௌலவி S.A.அப்துல் காதர் மிஸ்பாஹி காதிரி அவர்கள் கௌதுல் அஃலம் அவர்களின் சரித்திர சம்பங்களை எடுத்துக் கூறுகிறார்கள்.



புகைப்படங்கள் அதிரை அப்துல்ரஹ்மான்