Sunday, May 1, 2011

உடன்கட்டை ஏறுவோம்



என்னை நான் தேடி
என்னுள் அலைந்தாடி
உந்தன் கரம் தேடினேன்

சிந்தை திரியேற்றி
என்னுள் பலச்சாற்றி
உன்னை நான் காண்கிறேன்

காற்றின் கைக்கோர்த்து
நகைத்து விளையாடும்
அலையை நான் காண்கிறேன்

அலையின் நிலைபோல
பொழுதும் அலைமோதும்
நினைவில் ஏன் வாழ்கிறேன்

உயர பறந்தும் - சிரம்
பணிந்து மகிழ்கின்ற‌
பறவை மனம் கேட்கிறேன்

பிறந்த மனம் தன்னில்
திரியும் பொருள்கண்டு
எரிந்து நான் வேகிறேன்

ஞானம் தனைத்தேடி
கோணம் பலவாக
திரியும் பலமாந்தருள்

தேடி எமைவந்து
கூடி நலங்காக்கும்
குருவையெப் போற்றுவேன்

பொழுதும் ப‌ல‌வாக‌
விழுந்து தொழுதாலும்
இறையை அறிந்தாரில்லை


அடையும் இட‌ம‌றியா
அலைந்து திரிவோர்க‌ள்
அறிவில் சிறந்தோரில்லை

வ‌ழிவிடும் தோற்றம்
இடைவெளிக் காட்டும்
நிலைத‌னை மாற்றவே

குவ‌ல‌ய‌ம் எங்கும்
நறும‌ண‌ம் பொங்கும்
ந‌பிபுக‌ழ் பாடுவோம்

இடிவ‌ரும் முன்னே
வெளிவ‌ரும் மின்னல்
ஒளித‌னைப் போல‌வே

இழிப‌வ‌ர் கூட்ட‌ம்
ஒழிவ‌த‌ற்க்(கு) உட‌ன்
க‌ட்டையும் ஏறுவோம்


அமீர்அலி - மதுக்கூர்