Saturday, February 27, 2010

இலங்கை வெலிகமையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் மீலாதுப் பெருவிழா படங்கள்

























இணையதளத்தில் பத்திரிக்கையை வெளியீடுவதற்கு கலந்தாலோசனைகள்
































































































































இலங்கை வெலிகமையில் கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ரஸூலேகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தின விழா மிகச் சிறப்புடன் பிப்ரவரி 26 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் துவங்கப்பட்டு ரசூல் மாலை ஓதப்பட்டது.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கத்தார், குவைத் மற்றும் அமீரகம் துபையிலிருந்து பல இஸ்லாமியர்கள் இந்நிகழ்ச்சியை கௌரவிக்கும்முகமாக வருகை புரிந்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிப்ரவரி 27 மாலை சிறப்புவிருந்தினராக "இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் இந்திய பாரளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர்மைதீன் எம்.ஏ" அவர்களும் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் மாநில மார்க்க அணிச்செயலாளர் தளபதி ஷபிக்குர்ரஹ்மான் அவர்களும் இலங்கை வெலிகம சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல்அவுன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் திரு இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளர்கள்.

மஃரிப் தொழுகைக்குப்பின் சங்கைமிகு கலீல்அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் நடைப்பெற்ற இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா (இராத்தீபு மஜ்லீஸ்)நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியை வெலிகமையிலிருந்து நேரடியாக இங்கு பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.