Monday, March 10, 2014

திருச்சியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா!

உலகம் தழுவிய மீலாதுன்னபி ஆன்லைன் கேள்வி - பதில் நிகழ்ச்சி அமீரகத்தில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நான்காம் ஆண்டாக நடாத்தி இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் சுமார் 2000 அதிகமானோர் கலந்து, தங்களின் பதிலை அஞ்சல் மூலமாக அனுப்பினார்கள். இதில் சுமார் 100 மாணவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திருச்சி ஜாமிஆ யாசீன் அறபுக்கல்லூரியில் பரிசளிப்பு விழா 09/03/2014 ஞாயிறு காலை நடைபெற்றது. பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். முதல் பரிசு 5000 ரூபாய், இரண்டாம் பரிசு 3000 ரூபாய், மூன்றாம் பரிசு 2000 ரூபாய், சிறப்பு பரிசு 1000 ரூபாய், மற்றும் 100 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி நூல்கள் வழங்கப்பட்டன. கலந்துக் கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினரின் ஏற்பாட்டில் ஜாமிஆ யாசீன் அறபுக் கல்லூரியின் பிரின்ஸ்பல் தலைமையில் மற்றும் கிப்லா இதழ் ஆசிரியர் மௌலவி அப்துஸ்சலாம் முயற்சியிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கவிஞர் மு.மேத்தா மற்றும் பல கல்லூரிகளின் முதல்வர்களும் கலந்து சிறப்பித்தார்கள்

































































THANKS - ANSARI