Monday, December 2, 2013

ஐக்கிய அரபு அமீரகம் 42வது தேசிய தினம்

டிசம்பர் 1 ம் தேதி இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் பத்ருசஹ◌ாபாக்கள் இல்லத்தில் வாவாமுகம்மது குழுவினர்கள் ஏற்பாட்டில் ஐக்கிய அரபு அமீரகம் 42வது தேசிய தினம் நிகழ்ச்சியை மிக சிறப்பாக கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சி ஆபித்அலி மெளலானா முன்னிலையில் திருமுல்லை வாசல் சையதுஅலி மெளலானா தலைமையில் நடைபெற்றது. அமீரகத்தின் வளர்ச்சியை பற்றி மிகத் தெளிவாக சையதுஅலி மௌலானா, கிளியனூர் இஸ்மத், மதுக்கூர் சாகுல்அமீது மற்றும் வாவா முகம்மது உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத் குழுவினர்களும், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அன்பர்களும் கலந்து சிறப்பித்தார்கள.