Wednesday, July 3, 2013

மயிலாடுதுறையில் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் மே 23 வியாழன் மாலை வெள்ளி இரவு பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி கிளியனூர் இஸ்மதின் புதிய இல்லக் கட்டிடத்தில் திருமுல்லைவாசல் கண்ணியமிக்க மசூது மௌலானா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆன்மீக சகோதரர்கள் கலீபா மௌலவி எஸ்.உசேன் முஹம்ம ஆலிம் ஹக்கியுல்காதிரி மற்றும் இரஹமத்துல்லாஹ் ஹக்கியுல்காதிரி அவர்களும் வழுத்தூர் ஆன்மீக சகோதரர்கள் நத்தர்ஷா அப்துல்வஹாப் மற்றும் சகோதரர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சிக்குப் பின் மயிலாடுதுறை சுற்றுவட்டார ஆலிம்களால் சுப்ஹான மெளலுது மற்றும் ஸலாத்துன்னாரிய்யாஹ்வும் ஓதி சிறப்பளித்தார்கள்.