Sunday, August 14, 2011

துபாய்,ஷார்ஜாவில் இப்தார் மற்றும் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் பிறை 14லில் ஓதப்படும் இராத்திபத்துல் காதரியா நிகழ்ச்சி மௌலானாமார்களின் முன்னிலையில் இப்தாருடன் சிறப்பாக நடைபெற்றது. புனித நோன்பைத் திறந்து மஃரிப் தொழுகைக்குப் பின்னர் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன. அனைத்து துபாய் ஆன்மீக சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்கள்.









இதே நாளில் ஷார்ஜாவில் ஜியாவுதீன் மௌலானா முன்னிலையில் ஷார்ஜா ஆன்மீக சகோதரர்கள் இராத்திபத்துல்காதிரிய்யா நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்தனர். துபாயிலிருந்தும் சிலர் இதில் கலந்துக் கொண்டார்கள்.


இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சிக்குப்பின் சிறிய சொற்பொழிவை கிளியனூர் இஸ்மத் நிகழ்த்தினார்.







புகைப்படங்கள்
துபாய்- அமீர்அலி மதுக்கூர்
ஷார்ஜா - ஹகமது ஹிம்தாதுல்லா முதுவை