Tuesday, November 22, 2011

மரக்கன்றுகள் நடும் & வழங்கும் விழா

உலக வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்கமும் மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்றது .

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக மதுக்கூர் கிளையின் செயலாளர் முஹம்மது இஸ்ஹாக் அவர்களும் உறுப்பினர் இத்ரீஸ் அவர்களும் கலந்து கொண்டு ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் ( தேக்கு , செஞ்சந்தனம் ) மரக்கன்றுகள் நட்டனர் .மேலும் ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க கிளையின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர் . 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை வழங்கியது

தகவல் , புகைப்படங்கள் : Er.A.இத்ரீஸ்